பெங்களூரு விமான நிலையம்: ரூ.53.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


பெங்களூரு விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.53.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இதில் அந்தப் பயணி துபாயிலிருந்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரிடமிருந்த ரூபாய் 53.22 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 13 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

53 lakhs worth gold seized in bangalore airport


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->