விமானத்தில் துணையின்றி தனியொருவனாக வந்து இறங்கிய சிறுவன்.. கொரோனா அலப்பறைகள்..!
5 year child travel delhi to Bangalore in flight
கரோனா ஊரடங்கின் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள நான்காவது ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டது. இன்று காலை முதலாகவே மத்திய அரசின் அறிவுறுத்தல்படி உள்நாட்டு விமான சேவைகள் துவங்கியுள்ள நிலையில், சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், மதுரை, திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் வந்து செல்ல துவங்கியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கெம்பேகவுடா சர்வேதச விமான நிலையத்தில் இரண்டு விமானம் தரையிறங்கிய நிலையில், பயணிகள் விமான நிலையத்தில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்.
இதில் ஐந்து வயது சிறுவன் நடந்து வந்த நிலையில், சிறுவன் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் தனியாக பயணம் செய்து வந்ததும், இந்த சிறுவனை அழைத்து செல்ல சிறுவனின் தாய் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த விஷயம் குறித்த பேசிய சிறுவனின் தாய், எனது மகன் பெயர் விஹான் சர்மா (வயது 5). இவர் டெல்லிக்கு சென்றிருந்த நிலையில், கொரோனா காரணமாக அங்கேயே மாட்டிக்கொண்டான். தற்போது மூன்று மாதம் கழித்து பெங்களூருக்கு வருகை தந்துள்ளான் என்று கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
5 year child travel delhi to Bangalore in flight