35 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... எம்.எல்.ஏ. உட்பட 19 பேர் செய்த கொடூரம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
35 girl children at Archive
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் என்னும் பகுதியில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு அளிக்கும் நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் இருக்கும் சிறுமிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், காப்பகத்தில் இருந்து 35 சிறுமிகளை மீட்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து, 20 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர் அந்த 35 சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 8 பெண்கள் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பிரிஜேஷ் தாக்கூர் முக்கிய குற்றவாளி என்பது கூடுதல் தகவலாக இருக்கிறது.
English Summary
35 girl children at Archive