பீகார்: சத் பூஜையின் போது சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து - 30க்கும் மேற்பட்டோர் பேர் காயம்
30 injured Cylinder blast in chhath Puja in Bihar
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலை 2:30 மணியளவில் அனில் கோஸ்வாமி என்பவரின் குடும்பத்தினர் சத் பூஜைக்காக சமைத்துக் கொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது கொழுந்துவிட்டு எரிந்து அனைத்து இடங்களுக்கும் பரவத் தொடங்கியது.
இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த பயங்கர தீ விபத்தில் தீயை அணைக்க முயன்ற 7 போலீசார் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அவுரங்காபாத் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
30 injured Cylinder blast in chhath Puja in Bihar