விசாகப்பட்டினம் : பள்ளி மேற்கூரை விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா விசாகப்பட்டினத்தில் பள்ளியின் மேற்கூரை விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பத்மநாபம் மண்டலத்தில் உள்ள அர்ச்சகுனிபாலம் தொடக்கப்பள்ளியில் வழக்கம் போல் மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது நேற்று முன்தினம் திடீரென வகுப்பறை மேற்கூரையின் ஒரு பகுதி விழுந்துள்ளது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விஜயநகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் விபத்து நடந்த பள்ளி கட்டிடம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு ஹசன்பர்த்தியில் உள்ள ஜில்லா பரிஷத் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வகுப்பறையின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு மாணவிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 students injured in Visakhapatnam school roof collapse


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->