கர்நாடகா : மண் சரிந்து விழுந்து கணவன்-மனைவி உட்பட 3 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் வீடு கட்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் தம்பதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மலைக்குன்றையொட்டி புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திடீரென மதியம் 1 மணியளவில் மலை மேலே குவித்து வைத்திருந்த மணல் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் மண்ணுக்கடியில் சிக்கிக் கொண்ட நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், மண்ணை அகற்றி மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றினர். இதில் உயிரிழந்தவர்கள் கதக் மாவட்டம் முண்டரகி பகுதியைச் சேர்ந்த சோமசேகர ரெட்டி(45) அவரது மனைவி சாந்தா(40) மற்றும் ஒரு தொழிலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people including a husband and wife were killed in a landslide in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->