லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் குஷ்டகி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கலகேரி அருகே முன்னாள் சென்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த கவுரம்மா(வயது 60), சுரேஷ்(43) மற்றும் பிரவீன் குமார்(27) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.

மேலும் சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் உடனடியாக லாரியை நிறுத்தியபோது, கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed in lorry car collision in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->