மும்பை : ரூ.23 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மும்பையில் ரூபாய் 23 லட்சம் மதிப்புள்ள ஆன போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோவண்டி பகுதி அருகே போதைப்பொருள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து மும்பை போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 23 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து போதை பொருள் கடத்தல் சம்பந்தமாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

23 lakhs worth drugs seized in Mumbai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->