'இன்ஸ்டாகிராமில் பழக்கம்'... சிறுமிக்கு நடந்த கொடுமை.. டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில்.! நீதிமன்றம் அதிரடி - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் தயானந்தா தன்னன்னவர்(30). இவருக்கும், 13 வயதுடைய சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தயானந்தா சிறுமியை கட்டாயப்படுத்தி வெளியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளார். இருப்பினும் சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், தயானந்தாவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்குதட்சிண கன்னடா மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு உடனடியாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், தேசிய வங்கியில், சிறுமியின் பெயரில் ரூபாய் 2 லட்சம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years in prison for an driver who raped a 13 year old girl in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->