தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து - 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் உள்ள, மிரியாளகுடா பகுதியில் இருந்து நேற்று இரவு மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பதிக்குச் சென்றது. இதையடுத்து இந்தப் பேருந்து இன்று அதிகாலை, ஆந்திர மாநிலம் மோச்சரலா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

இதனால், நிலை தடுமாறிய பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக சிதைந்து ஓட்டுநர் வினோத் உடல் நசுங்கி மரணம் அடைந்தார். 

மேலும் ஏழு பயணிகள் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு காவாலியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக சாலையில் இருந்த பேருந்தை, நகர்த்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்தனர். 

மேலும், ஓட்டுநர் வினோத்தின் சடலத்தை, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பேருந்து விபத்தில் காயமடைந்த சித்தம்மா என்ற மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 peoples died in bus accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->