ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமிக்கு நடந்த கொடூரம்.. உத்திரபிரதேசத்தில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் சிறுமியை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நேகா பஸ்வான். இவரது தந்தை பஞ்சாபில் வேலை செய்து வருவதால் அவரின் தாயார் மாமனார் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் சிறுமியை அவரது மூன்று பெரியப்பாக்களும் துணிகளை துவைத்து தரும்படி கேட்டுள்ளார்.

இதற்கு நேக மறுப்பு தெரிவிக்கவே அவரை அடித்துள்ளார். மேலும், ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது எனக் கூறியும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், வயதானவர்கள் சிறுமியின் சடலத்தை பாலத்தின் கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து நேகாவின் தாய் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். ரயில்வே பாலத்தில் தொங்கிய அவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறவாக உள்ள சிறுமியின் தாத்தா மற்றும் பெரியப்பா தேடி வருகின்றனர். இந்தச்ச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years old Girl killed in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->