பீகார் || உணவுகாளான் என நினைத்து விஷ காளானை சாப்பிட்ட 13 பேர் பலி..!
13 Death in Bihar
விஷ காளான் சாப்பிட்டு 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் திப்ருகார், ஷிவசாகர், தின்சுஹியா ஆகிய பகுதிகளில் விளைந்த காளானை பறித்து சென்ற சிலர் அதனை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அந்த காளானை சாப்பிட்ட சுமார் 35 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், காடுகளில் உண்ணக்கூடிய காளான்கள் என நினைத்து விஷ காளான்களை சாப்பிட்டுகின்றனர்.
இதுபோன்ற காளான்கள் குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விஷ காளானை சாப்பிட்ட பாதி பேர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.