100வது வயதில் திருமணம் செய்த முதியவர்.. வாழ்த்து தெரிவித்த குடும்பத்தினர்.!
100 years old man again married in birthday
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது நூறாவது பிறந்த நாளில் மீண்டும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு குடும்பத்தினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வானந்த் சாகர் என்பவர் நேற்று 100வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அவரது பேரன், பேத்திகள், மகன், மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது நூறாவது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பிய முதியவர் தனது மனைவியை அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். மாலை அணிவித்து, மீண்டும் தாலி கட்டி, பொட்டு வைத்த நிலையில் அவருக்கு அவருடைய மகன்கள், மகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
English Summary
100 years old man again married in birthday