சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவருக்கு 10 ஆண்டு சிறை... நீதிமன்றம் அதிரடி..! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மினி லாரி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மினி லாரி ஓட்டுநர் விஜயராஜ் (33). இவர் புதுச்சேரி மாநிலம் பங்கூரில் தங்கி, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தபோது இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஜயராஜின் மனைவி பிரசவத்திற்கு அவரது தாய் வீட்டிற்கு சென்றபோது, சிறுமியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்பொழுது அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சட்டத்தின் கீழ் விஜயராஜை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பலாத்காரம் செய்த விஜயராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு அரசு நாலு லட்சம் நிவாரணம் வழங்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 years in prison for a driver who raped 17 year old girl in puducherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->