சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டை: என்கவுண்டர் செய்யப்பட்ட 10 நக்சல்கள்..!
10 Naxals killed in encounter in Chhattisgarh
சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் அமைப்பினரை, 2026-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதன்படி நக்சல் அமைப்பின் பல முன்னணி தலைவர்கள்அதிரடியாக கொல்லப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் சரண் அடைந்துள்ளனர். எஞ்சியுள்ள நக்சல்களை தேடும் பணி, சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மெயின்பூர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கோப்ரா, எஸ்டிஎப் உள்ளிட்ட பிரிவினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் என்கவுண்டரில் 10 நக்சல்கள் உயிரிழந்துள்ளனர். இதன் போது குறித்த அமைப்பின் மூத்த தலைவரான மனோஜ் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, அவரை பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், அது முடிந்ததும் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
10 Naxals killed in encounter in Chhattisgarh