மகாராஷ்டிரா: பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - ஒருவர் பலி, 10 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கிலிருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனியார் பேருந்தில் 35 பேர் ஷாபூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இன்று காலை கண்டெய்னர் லாரி பேருந்தின் பின்பக்கம் மோதியது.

இதில் பேருந்து ஓட்டுனர் முன்பக்கமாக கீழே விழுந்ததில் கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர். 

இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 killed 10 injured in bus container lorry accident in Maharashtra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->