கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கக்கூடாது - ஓ.பன்னீர்செல்வம்!!
Kallar renovation schools linked with the school education department O Panneerselvam
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கக்கூடாது என முன்னாள் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது,
பிரமலைக்கள்ளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கல்வியறிவு பெற்று உயர்நிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசியல் இந்த நடவடிக்கை எதிர்த்து மதுரை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் திமுக அரசின் இந்த செயல் கலாச்சார சிறுபான்மை சமூகமாக விளங்கும் பூர்வ குடிமக்களாக பபிரமறை கள்ளர் உரிமையை பறிக்கும் செயல் என்று அரசின் இந்த நடவடிக்கை ஒரு தலைமானது என்றும் தெரிவித்துள்ளது. சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை உடன் இணைக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி கல்லை சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மட்டும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழ் இரங்க அனுமதிக்க வேண்டும் என்று முதன் முதலில் கேட்டுக்கொள்கிறேன் என்று இவ்வாறு கூறியுள்ளார்.
English Summary
Kallar renovation schools linked with the school education department O Panneerselvam