பஞ்சாப் || எரிவாயு நிரப்பும்போது ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலி.!
1 died in cylinder blast during liquid nitrogen filling in Punjab
பஞ்சாபில் தனியார் ஆலையில் எரிவாயு நிரப்பும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள நஸ்ராலா அருகே செயல்பட்டு வரும் ஜேகே எண்டர்பிரைசஸ் தனியார் எரிவாயு ஆலையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திரவ நைட்ஜரன் எரிவாயு சிலிண்டரை நிரப்பும்போது விபத்து ஏற்பட்டதாக ஹோஷியார்பூர் காவல் கண்காணிப்பாளர் மன்பிரீத் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். மேலும் சண்டிகரிலிருந்து தடயவியல் குழு வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
1 died in cylinder blast during liquid nitrogen filling in Punjab