பாகிஸ்தான் ஐஎஸ்ஐக்கு இந்திய சிம் கார்டுகளை விற்ற ராஜஸ்தான் நபர் கைது!
rajasthan operation sindoor
பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பு ஐஎஸ்ஐக்கு தரப்பு உளவு பணியில் ஈடுபட்டதாகும் குற்றச்சாட்டில், ராஜஸ்தான் பரத்பூரைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு கைது செய்துள்ளது.
மேவாட் பகுதியில் உள்ள டீக் நகரத்தில் பிடிபட்ட காசிம், ஆகஸ்ட் 2024 மற்றும் மார்ச் 2025 ஆகிய மாதங்களில் பாகிஸ்தான் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் அங்கு மொத்தம் 90 நாட்கள் தங்கி, ஐஎஸ்ஐ அதிகாரிகளிடம் உளவுப் பயிற்சி பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி, அந்நாட்டு உளவுத்துறையினர் வாட்ஸ்அப் வழியாக இந்தியர்களை தொடர்பு கொண்டு ராணுவ மற்றும் அரசியல் தரவுகளை சேகரிக்கச் செயலில் ஈடுபட்டதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
rajasthan operation sindoor