இந்த ஒரு அரிசி போதும் - மலச்சிக்கலை உடனடியாக நீக்கலாம்.!
how to clear malachikkal
தற்போதைய காலத்தில் மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனை இயற்கை முறையில் சரி செய்வது குறித்து காண்போம். இந்த மலச்சிக்கலுக்கு இயற்கை வழியில் பல வைத்தியங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் காட்டு யானம் அரிசி வைத்தியம்.
இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகையில் ஒன்று இந்த காட்டு யானம் அரிசி. இதில், புரதம், கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை தருகிறது.
அப்படிப்பட்ட இந்த அரிசியை எப்படி சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் என்று பார்ப்போம். இந்த காட்டு யானம் அரிசி சிறிதளவு எடுத்து நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை முழுமையாக நீங்கும்.