கோடை காலத்தில் இதையெல்லாம் தப்பி தவறி கூட செய்து விடாதீர்கள்.! உஷார்.! - Seithipunal
Seithipunal


கோடை காலத்தில் இதமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் அடிக்கடி குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள ஜூஸ் உள்ளிட்டவற்றை குடித்துக் கொண்டே இருப்பார்கள். இது நமது உடலில் உள்ள நீரை உறிஞ்சுகிறது.

இதனால் உடல்நிலை பாதிக்கப்படும். இது செரிமான மண்டலத்தையும் பாதிப்பதால் வயிற்றில் கார்பண்டை ஆக்சைடு ஏற்பட்டு ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆக மாறுகிறது எனவே செரிமான நொதிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

வெயில் காலத்தில் அதிகப்படியான கார ம் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதே நேரம் எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

 இந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் ஜீரண சக்தி பாதித்து அதிகப்படியான பித்தம் மற்றும் உஷ்ணம் வியர்வை நீர் இழப்பு உள்ளிட்டவை ஏற்படுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படும். 

கோடை காலத்தில் சாதாரணமாகவே அதிகப்படியான வியர்வை வெளியேறுகின்றது. எனவே, உடற்பயிற்சிகளை அதிகப்படியாக செய்தால் அது உடலில் உள்ள நீர் சத்தை காணாமல் போகச் செய்யும். அதற்காக மொத்தமாக உடற்பயிற்சிகளை தவிர்க்கவும் தேவை இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avoid these things in summer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->