மூட்டுவலி வந்து வலிக்கிறதா...? உடனே பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகள் என்னென்ன தெரியுமா...?
Are you suffering from joint pain Do you know what safety measures you should follow immediately
மூட்டுவலி வந்தபின் காக்கும் முறைகள் :
தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும் முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும்.
ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பகல் உணவுக்குப் பின் 10,20 நிமி டங்கள் ஓய்வெடுப்பது மூட்டுவலியை நன்கு குறைக்கும்.

உப்பு கரைத்த நீரில் குளித்தால் பக்க விளைவுகள் ஏதுமின்றி மூட்டு வலி பறந்து போகும்.
சிறிது கறுப்பு எள்ளை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன் தினம் இருமுறை வெறும் வயிற்றில் குடித்தால் வலி குறையும்.
மூட்டுவலிக்கு உடனடி தீர்வு வேண்டுமெனில் வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயை நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.
ஐஸ் கட்டிகளால் வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறை இதே போன்று செய்ய வேண்டும்.
English Summary
Are you suffering from joint pain Do you know what safety measures you should follow immediately