குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி!!
tnpsc hall ticket
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி 301 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பம் முறையாக பதிவு செய்து நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு டி.என்.பி.எஸ்.சி கேட்டுக் கொண்டுள்ளது.