குரூப் 2 பதவிக்கான நேர்முகத் தேர்வு எப்போது? - டிஎன்பிஎஸ்ஸி அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குரூப் 2 தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.ஸி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். 

அதில், குரூப் 2 பதவியில் அடங்கிய பதவிகளுக்கு கடந்த 25.3.2023 அன்று முதன்மை எழுத்து தேர்வு நடைபெற்றது. முதன்மை எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் அத்தெரிவிற்கான வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 327 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் மற்றும் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும். 

இதே போல தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணியில் அடங்கிய மருத்துவ சோதனை ஆய்வகக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கான தேர்வு 5.12.23 அன்று நடைபெற்றது. இதில் 126 பேரின் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tnpsc announce interview date for group 2 posting


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->