B.ED, M.ED, M.PHIL மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்! பல்கலைக்கழகத்தின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி..!
tamilnadu teachers education university announcement
பல்கலைகழக மானிய குழுவின் அறிவிப்பை தொடர்ந்து சென்னை பல்கலைகழகம் உள்பட தமிழகதில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்கள் இறுதி ஆண்டு மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் என்று அறிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகமும் பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்களை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களது இறுதி செமஸ்டர் தேர்வை வீட்டில் இருந்தே எழுதலாம் என்றும் விடைகளை 40 பக்கத்திற்கு மிகாமல் எழுதி கல்லூரி முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பினால் பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
tamilnadu teachers education university announcement