1-12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த உத்தரவு.!!
school education dept new order
கோடை விடுமுறைக்கு பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் நேற்று முதல் ஆரம்பமாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

காலை 9:10 மணி முதல் 4:10 மணி வரையில் எட்டு பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேர வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அட்டவணைகள் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. ஆனால், இது திட்டமிடலுக்கான நேரம்தான், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து பள்ளிகளின் அமைவிடம் வகுப்புகள் தொடங்கும், முடியும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், 1-12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைந்து நடத்தப்பட்ட நிலையில், முழு படங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
school education dept new order