கோடை விடுமுறையில் திடீர் திருப்பம்... மே 31-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்.. கல்வி அமைச்சர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அனைத்து பள்ளிகளின் கோடை விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளும் மே 15 முதல் மே 31-ஆம் தேதி வரை ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மே 15ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளிகள் காலை 7 மணி முதல் 11 மணி வரையும்,நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab school summer holiday change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->