பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்.! நாள் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககம்.!
plus two mark sheet
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, "2019 - 2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 17.09.2021 அன்று முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள, பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளியில் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும்''. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.