இனி ஆன்லைன் தேர்வு கிடையாது.. யுஜிசி அதிரடி.! அதிர்ச்சியில் மாணவர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தது. இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. 

இதையடுத்து, கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஒன்றாம் வகுப்பில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்டது. தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக் கழக நேரடி தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உயர்க்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன். மூலம் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது. 

இந்நிலையில், நாடு முழுவதும் கல்லூரி பல்கலைக் கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என பல்கலைக்கழக குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலாளர்களுக்கும், யுபிசி செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no online exam for colleges


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->