மதுரை மாணவருக்கு கிடைத்த நீதி.. லட்சத்தீவிலிருந்து மாற்றப்பட்ட தேர்வுமையம்.!
Madurai Student exam Hall changed
நாடு முழுவதும் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் 43 மத்திய பல்கலைக்கழங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் இந்த மனிதவள மேம்பாட்டு துறையின் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது.
இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் சேர நினைக்கின்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இதன்படி 2022- 2023 ஆம் ஆண்டின் நுழைவுத்தேர்விற்காக விண்ணப்பித்த மதுரை மாணவருக்கு நுழைவு தேர்வுக்கான தேர்வு மையம் லட்சத்தீவில் கொடுக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், வெளியிட்டு இருந்த ட்வீட்டில்," மதுரை மாணவர்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம். நுழைவுத் தேர்வெழுத அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா?தேர்ச்சி பெறுவதை விடக் கடினம் தேர்வு மையத்தை சென்று சேர்வது என்ற நிலையை உருவாக்காதீர்கள். தேர்வு மையத்தை மாற்றுங்கள்."என்று தெரிவித்து இருந்தார்.
இத்தகைய நிலையில், அந்த மாணவர் லோகேஷ்வருக்கு லட்சத்தீவிலிருந்த தேர்வு மையத்தை மாற்றி மதுரையில் தேர்வெழுதும் விதமாக, தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தர் இருவரும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
English Summary
Madurai Student exam Hall changed