#TNPSC || குரூப்-2 தேர்ச்சி பெற்றவர்களே.. "ஜனவரி 27" வரை இறுதி வாய்ப்பு .. உடனே செக் பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


நீண்ட நாள் காத்திருப்பதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 2, 2a தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது. இந்நிலையில் குரூப் 2 நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் சான்றிதழ்களை ஜனவரி 27 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "குரூப் 2 தேர்வில் (நேர்முகத் தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர் அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் குறைபாடாக பதிவேற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில் அவர்கள் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜனவரி 27ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த தகவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களை ஒரு முறை பதிவேற்றம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்" என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jan27 last date for tnpsc grp2 candidates certificate upload


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->