10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான கல்வி சான்றிதழ் - வெளியான சுற்றறிக்கை.!
announce for ITI students
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான கல்வி சான்றிதழ் பெற ஐ.டி.ஐ மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடந்தப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மண்டல இணை பயிற்சியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஐ.டி.ஐ முடித்த மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான கல்வி சான்றிதழ் பெற, தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி இதற்கான துணை தேர்வுகள் ஜூலை, ஆகஸ்டில் நடைபெற உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளில் பங்கேற்க இன்று சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களுக்கு இதை தெரிவிக்கும் வகையில் அனைத்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
announce for ITI students