பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம், பேராசிரியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பின்படி, 

டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு 67,900 ரூபாயும், அதிகபட்சமாக 1,40,900 ரூபாயுமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மூன்று ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக 88,500 ரூபாயும், அதிகபட்சமாக 1,94,100 ரூபாயுமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இரண்டு ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக 85,000 ரூபாயும், அதிகபட்சமாக 1,95,200 ரூபாயுமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்ந்தது :

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் 79,600 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதிகபட்ச கட்டணமாக 1,89,800 ரூபாய்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், உதவிப் பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் 1,37,189 ரூபாயும், பேராசிரியர்களுக்கு 2,60,379 ரூபாயுமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AICTE announce education may


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->