தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும்... அறநிலையத்துறையில் 281 காலி பணியிடங்கள்..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தட்டச்சர்-6, நூலகர்-1, கூர்க்கா-2, அலுவலக உதவியாளர்-65, உபகோவில் வேலை-26, சமையல் உதவியாளர்-2, தூய்மை பணியாளர்-3, பூஜை காவல்-10, காவல்-9, பாத்திர சுத்தி-50 என மொத்தம் 281 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பதவிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியும், தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் தெளிவாக இடம்பெற்றுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தண்டாயுதபாணி திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய தேதி 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

281 job vacancies in palani murugan temple under TNHRCE


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->