1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் இறுதித்தேர்வு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வருகின்ற மே 6ஆம் தேதி  இறுதி தேர்வு நடைபெற உள்ளது. 

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வருகின்ற 15ஆம் தேதி மாணவர்கள் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா.? என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தமிழகத்தில் கட்டாயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை வரை இறுதி தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி தேர்வு இறுதித் தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1st to 9th class exam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->