ஐயோ! பாகிஸ்தான் டிக் டாக் பிரபலத்தை சுட்டுக்கொன்ற நபர்...! விசாரணையில் போலீஸ்...!
man who shot and killed Pakistani TikTok celebrity Police investigating
பாகிஸ்தானை சேர்ந்த 17 வயதான சனா யூசப் என்பவர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர். இவர் பெண்கள் உரிமைகள், கல்வி குறித்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் கருத்துகள், உள்ளிட்டவை பற்றி பதிவிட்டு வந்துள்ளார்.

அவரை சமூக வலைதளங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடருகின்றனர்.இதனிடையே இஸ்லாமாபாத்தின் ஜி-13 செக்டார் பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று (ஜூன் 2) திடீரென புகுந்த நபர் ஒருவர், சனாவை 2 முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, உடனடியாக அவரது குடும்பத்தினர் சனாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சனா ஏற்கெனவே இறந்து விட்டதாகக் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சும்பல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு அந்த நபர் சனா யூசப்புடன் பேசிக்கொண்டிருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர். இது கவுரவக்கொலையாக இருக்கலாம் என்று காவலர்கள் சந்தேகிக்கிறார்கள்.
English Summary
man who shot and killed Pakistani TikTok celebrity Police investigating