ராஜஸ்தானில் பயங்கரம்: டீசல் திருடிய குற்றச்சாட்டு, டிரைவரை தலைகீழாக தொங்கவிட்டு கொடுரமாக தாக்கிய நபர்..!
Man hangs driver upside down and brutally attacks him in Rajasthan on charges of stealing diesel
வாகனத்தில் டீசல் திருடி விட்டதாக கூறி டிரைவர் ஒருவரை ஜேசிபியில் தலைகீழாக தொங்கவிட்டு நபர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பியாவர் நகரை சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவருக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை, அவரது டிரைவர் இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் அந்த டிரைவர் வாகனத்தில் இருந்து டீசல் திருடிவிட்டதாக கூறி, அவரை கயிற்றில் கட்டி ஜேசிபி வாகனத்தின் உயரத்தில் தலைகீழாக கட்டிவைத்து தொங்கவிட்டுள்ளார். அத்துடன், பெல்ட் மற்றும் கம்புகளால் அடித்ததுடன், அவரது காயங்களில் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளார்.

இந்த கொடூரமான தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக பியாவர் காவல்துறை, இந்த சம்பவத்திற்கு காரணமான தேஜ்பால் சிங்கை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன், பாதிக்கப்பட்ட டிரைவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தாக்குதலால் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம், ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளதாக பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இந்த தாக்குதலை கண்டித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Man hangs driver upside down and brutally attacks him in Rajasthan on charges of stealing diesel