ஐதராபாத்தில் பரபரப்பு! கணவனே தனது கர்ப்பிணி மனைவியை கொன்ற அவலம் ...! நடந்தது என்ன ?
Hyderabad Pregnant wife hacked to pieces What happened
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம், காமரெட்டிகுடாவைச் சேர்ந்த 22 வயதான 'ஸ்வாதி'.இவரும், மகேந்தர் ரெட்டி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.வாழ்வாதாரத்துக்கு தற்போது வேலை தேடி வந்தார் 'மகேந்தர்'.

கடந்த 28 நாட்களுக்கு முன்பு, கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி ஸ்வாதியை அழைத்துக்கொண்டு மகேந்தர் ஐதராபாத் புறநகரில் இருக்கும் மேட்சல், மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸில் குடிஏறினார்.இந்நிலையில் நேற்று, மனைவி ஸ்வாதியை கணவர் மகேந்தர் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.
மேலும், இறந்த ஸ்வாதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து முசி நதியில் தூக்கி வீசியுள்ளார். இதில் ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டுள்ளன.
தைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் அங்கு ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் அற்ற உடலை கண்டு அதிர்ச்சியடைத்தனர்.
இதையடுத்து மகேந்தரை கைது செய்த காவலர்கள் கொலைக்கான காரணங்கள் குறித்து அவரிடம் மேற்கட்ட விசாரணை நடத்தி வருக்கின்றனர்.
English Summary
Hyderabad Pregnant wife hacked to pieces What happened