நாட்டுப்புற கலைஞர்களுக்காக விஜய் சேதுபதி எடுத்த புதிய முயற்சி.! பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்.!
Vijay Sethupathi new try for nattupura kalaingar
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல், மாநகரம் இந்தி ரீமேக்ஸஎன பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவும் வகையில் விஜய் சேதுபதி புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். அது என்னவென்றால் புத்தாண்டை முன்னிட்டு காலண்டர்கள் வியாபாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் நாட்டுப்புற கலைஞர் வேடத்தில் காலண்டரின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
மேலும், அந்த காலண்டர் மூலம் வரும் பணத்தை முழுவதுமாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்க உள்ளாராம். விஜய் சேதுபதியின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Vijay Sethupathi new try for nattupura kalaingar