விக்னேஷ் சிவன் மனவலியுடன் வெளியிட்ட பதிவு.! அதற்குள் ஒரு வருடம் ஆகிடுச்சா? ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் சமீபத்தில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக நடிகர் அஜித் குமாரின்  62வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், அஜித்குமாரின் 62 ஆவது படத்தை தயாரிக்கும் நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த படத்தை முதலில் இயக்க இருந்தது இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு இதே நாளில் வெளியாகியது.

இதை மேற்கோள் காட்டி இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு ஸ்டோரியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். அதில் தனது பட பாடலின் வரிகளை குறிப்பிட்டு தனது மன வலியை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

அதாவது, " கிடைச்சதை இழக்குறதும் இழந்தது கிடைக்கிறதும் வழக்கம் தானே?" என்று தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவை கண்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் அவரை தேற்றும் எண்ணத்தில் ஆறுதல் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh sivan remebered painfull announcement


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->