அந்த கேள்வியை கேட்டதற்காக ஆவேசம்.! செய்தியாளரிடம் எரிந்து விழுந்த வரலட்சுமி சரத்குமார்.!
varalatchumi sarathkumar angry while pressmeet
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அதுபோலவே அவருடைய மகள் வரலட்சுமி சரத்குமாரயும் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் நிறைய நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அவர் நடித்து புகழ் பெற்றவர்.
தற்போது, தெலுங்கு சினிமாவில் பட்டையைக் கிளப்பி வருகிறார். நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். வரலட்சுமியின் எழும்பூர் குழந்தைகள் நல காப்பகத்தில் மருத்துவமனையில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி அங்கிருந்த குழந்தைகளுக்கு பொம்மை சாக்லெட் போன்றவற்றை வழங்கி இருக்கிறார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார். திடீரென செய்தியாளர் ஒருவர் உங்களுடைய திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்ப இதைக் கேட்டவுடன் வரலட்சுமி கடுப்பாகி கேவலமான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள் என்று ஆவேசமாக பேசினார்.
திருமணம் என்பது பெண்களுக்கு மிகவும் அவசியமானதா? ஆண்கள் மட்டும்தான் கொள்கையை வைத்திருக்க வேண்டுமா பெண்கள் வைத்திருக்க கூடாதா இனி இதுபோன்ற கேவலமான கேள்வி கேட்காதீர்கள் என்று ஆவேசத்தை காட்டியுள்ளார்.
English Summary
varalatchumi sarathkumar angry while pressmeet