உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்.! படக்குழு வெளியிட்ட அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் மற்றும் அரசியல்வாதி என்று பன்முகத் திறமை கொண்ட உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தற்போது இருக்கிறார். அரசியலுக்கு வந்த பின்னர் மொத்தமாக சினிமாவை விட்டு உதயநிதி விலகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் சினிமாவில் மீண்டும் படங்களில் கமிட்டாகி இருக்கிறார் உதயநிதி. இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. உதயநிதி திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் அதிகப்படியான மக்களை சென்றடைய முடியும் என்பது கட்சியின் நம்பிக்கையாக இருக்கிறது. 

இந்த நிலையில் தற்போது அவர் போனிகபூர் தயாரிக்கும் ஆர்டிக்கிள் 15 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை போனிகபூர் இயக்க இயக்குனர் அருண் காமராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு உதயநிதி தாத்தாவான கலைஞர்தான் கதை வசனம் திரைக்கதை எழுதி இருப்பார். அத்துடன் தனது சுயசரிதையாக கலைஞர் எழுதிய புத்தகத்திற்கும் பெயர் நெஞ்சுக்கு நீதி தான். கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uthayanidhi nenjukku neethi update tommorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->