திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட முதல்வர்: நடிகை கங்கனா ரணாவத் தகவல்!
UP Chief Minister cried watching Actress Kangana Ranaut movie
தமிழில் 'தாம் தூம்' படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றினை எமர்ஜென்சி படத்தினை தானே தயாரித்து இயக்கி நடித்து வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கங்கணா நடித்துள்ள 'தேஜஸ்' திரைப்படம் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் 'தேஜஸ்' திரைப்படத்தை பார்த்து கண்கலங்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, ''முதல்வர் ஆதித்யநாத் தேஜஸ் படம் பார்க்கும்போது கண்கலங்கினார். இந்த படத்துடன் தொடர்பு கொள்ள தேசப்பற்று உள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த திரைப்படம் பெண்களின் முன்னேற்றத்திற்கானது அல்ல. பெண்களின் சக்தியை பற்றிய படம்'' என தெரிவித்துள்ளார்.
English Summary
UP Chief Minister cried watching Actress Kangana Ranaut movie