மன்சூர் அலிகானின் மன்னிப்புக்கு பதிலளித்த த்ரிஷா!
Trisha responded Mansoor Ali Khan apology
நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததற்கு திரைத்துறை மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதனால் தேசிய மகளிர் ஆணையம் கடந்த 20ஆம் தேதி மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் நேற்று பிற்பகல் விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் இன்று, 'எனது சக திரைநாயகி திரிஷா என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்' என அறிக்கை மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை திரிஷா தனது எக்ஸ் வலைதளத்தில், தவறு செய்வது மனிதம் எனவும் மன்னிப்பது தெய்வீகம் எனவும் மன்சூர் அலிகானின் செயலுக்கு பதிலளித்துள்ளார்.
English Summary
Trisha responded Mansoor Ali Khan apology