பாலிவுட் சினிமாவை.. இழிவு படுத்தி பேசிய காஜல் அகர்வால்.?! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளின் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமாகி  அதன் பிறகு தொடர்ந்து தென்னிந்திய  சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர். மகதீரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் இவர்.

தமிழில் பழனி திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, சிங்கம், மெர்சல், வலிமை போன்ற திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர். திருமணமாகி குழந்தை, குடும்பம் என செட்டிலானாலும் தனது சினிமா கேரியரிலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடியாக இணைந்து  நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில், ஏன்? தென்னிந்திய சினிமாக்களில் அதிகமாக நடித்து வருகிறேன் என்பது பற்றிய விளக்கம் கொடுத்திருக்கிறார் காஜல் அகர்வால். அந்தப் பேட்டியில் கூறியிருக்கும் அவர், தென்னிந்திய  சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம் மற்றும் மதிப்பு ஆகியவை இந்தி சினிமா துறையில் மிகக் குறைவு என தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் தென்னிந்திய சினிமாக்களில் அதிக படங்களில் நடிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three things which are standout in south industries that is why i prefer more than bollywood


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->