மணிமேகலை விலகியதற்கு இதுதான் காரணமா.?! மனம் திறந்த நடுவர் தாமு.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த மூன்று வருடங்களிலும் இந்த நிகழ்ச்சிக்கு  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதற்கு முன்பு சமையல் கலைஞர்கள் மாறினாலும் கோமாளிகள்  தொடர்ந்து கொண்டே வந்தனர். ஆனால் சீசன்4 நிகழ்ச்சியில் தான் நிறைய கோமாளிகளும் மாறி இருக்கின்றனர். இது குக் வித் கோமாளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியின் போது  கோமாளியாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மணிமேகலை இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது குக் வித் கோமாளி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் தாமு மணிமேகலை விலகியதற்கான காரணம் பற்றி தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து தனது பேட்டியில் பேசியிருக்கும் அவர் மணிமேகலை எனது மகள் போன்றவர். அவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகியது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய தாமு மணிமேகலை தனது தொகுப்பாளர் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கலாம் என தான் கருதுவதாக தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this is the reason why manimegalai part ways with cwc


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->