தில்லானா மோகனாம்பாள் படத்தின் நாதஸ்வர வித்துவான் எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார்.! - Seithipunal
Seithipunal


சிவாஜி கணேசன், பத்மினி,  பாலையா, நாகேஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1968-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற 'நலந்தானா' என்ற பாடல் இன்றும் பல படங்களில் நாயகன்- நாயகி நலம் விசாரிப்பது போன்ற காட்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற நாகஸ்வர காட்சிகள் அனைத்துமே பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்தில் சிவாஜியும் அவரது குழுவினரும் தான் இதை இசையமைத்தாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும், உண்மையாக நாகஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாகஸ்வர வித்வான்களான எம்.பி. என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் தான்.

இதில், எம்.பி.என்.பொன்னுசாமிக்கு கடந்த 1977-ல் தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கியது. அதே ஆண்டில் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருதையும் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி வயது மூப்புக்காரணமாக மதுரையில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thillana mokanaambaal movie nathaswara artist mpn ponnusami passed away


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->