ஐஸ்வர்யா ரஜினி பற்றி கிளம்பிய கிசுகிசு.. ரஜினி கடுப்பாகி போட்ட அதிரடி கண்டிஷன்.!
superstar rajni kanth warns her daghter to keep herself away from that person
தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இத்திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து வருகின்ற செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. என்னதான் பிஸியான நடிகராக இருந்தாலும் தனது குடும்பத்தின் மீது அக்கறையாக இருக்கும் நடிகர்களில் முதன்மையானவர் ரஜினி. இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மனம் ஒத்து திருமண வாழ்வில் இருந்து விலகினர். அதன்பிறகு தனுஷ் தனது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடிக்கடி இசையமைப்பாளர் அனிருத்தின் ஸ்டூடியோவில் தங்கி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பாடல் பாடுவதில் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா ரஜினி அது தொடர்பான வேலைகளில் தனது நெருங்கிய உறவினரும், குடும்ப நண்பருமான அனிருத்தின் ஸ்டுடியோவில் தங்கியிருந்து பணியாற்றுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனுஷுடன் திருமண வாழ்வில் இருக்கும் போதே அனிருத் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பற்றிய கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் கசிந்ததால் தற்போது தனது மகளை அழைத்து சூப்பர் ஸ்டார் கண்டித்திருப்பதாக தெரிகிறது. இதன்படி அனிருத் ஸ்டூடியோ விற்கு சென்று தங்க வேண்டாம் எனவும் சூப்பர் ஸ்டார் தனது மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
superstar rajni kanth warns her daghter to keep herself away from that person