திரையுலகில் சோகம்... நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சின்னத்திரை நடிகை உயிரிழப்பு!
Small screen actress died
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மலையாள சின்னத்திரை நடிகை பிரியா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் பிரியா (வயது 35). இவர் பல்வேறு சின்னதுரை தொடர்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு இடைவெளி கொடுத்த இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார்.
இவருக்கு கடந்த 31ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரியாவின் கருவில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை ரென்ஜுஷா மேனன் உயிரிழந்ததை அடுத்து பிரியாவின் இழப்பு மலையாள திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Small screen actress died