பாடும் நிலாவே.. வேலவனை வேண்டுகிறேன் -பின்னணி பாடகர் வேல்முருகன் உருக்கமான பாடல் வெளியீடு.!!
Singer Velmurugan feeling video to Pray SPB
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை சார்பில் தெரிவித்திருந்தது.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பி வர வேண்டும் என்று பலரும் கடவுளை பிரார்த்தித்து வரும் நிலையில், பின்னணி பாடகர் வேல்முருகன் பாடலொன்றை பாடி வெளியிட்டுள்ளார். இது குறித்த பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Singer Velmurugan feeling video to Pray SPB